No to centralization and privatization of research funding: Remit NRF bill to Parliamentary Standing Committee

Click here to see the signature campaign which closed on 30July

Press Coverage in Newsclick  TheHindu

Click here to see the press release on AIPSN letter head 

Links here  to download the press release in pdf: English , Tamil 

Read this to see a detailed AIPSN statement on the NRF

Press Release

             All India Peoples’ Science Network (AIPSN) says no to centralization and privatization of research funding and asks the Union Government to remit National Research Foundation Bill to Parliamentary Standing Committee on S&T, Environment and Forests for a comprehensive assessment.

The National Research Foundation (NRF) Bill, 2023 seeks to replace the Science and Engineering Board (SERB) Act, 2008 by establishing an entity that will not be a fully publicly funded, dependent on corporates, philanthropic bodies and international foundations for funds, centralized in decision making via the Prime Minister as ex-officio President and the Union Ministers of S&T and Education as ex-officio Vice-Presidents and controlling the directions of academic research across disciplines and domains of application.  The original rationale of NRF was to redirect the flow of funds to the state universities to strengthen them as academic institutions.

In the five year allocation of Rs 50,000 crores for R&D through the NRF, 72% of will be financed by the private sector (through as yet unidentified process), and only 28% funded by government. The funding structure will seek the establishment of a stronger intellectual property mechanism of the Bayh-Dole kind which has been resisted by the academic institutions. In the current proposal corporates and elite institutions with access to power centers will have an edge.

Only 1% of the institutions of higher education engage in active research. In terms of the percentage of GDP, India’s spending on research and development (R&D) is among the lowest in the world. In 2022, India only spent 0.65% of GDP on R&D. The public funding for R&D has come down from 0.8% at the start of the 2000s to about 0.65% now; full time equivalent (FTE) researchers in the higher education sector declined from 39.96% in 2015 to 36.48% in 2018. Researchers employed in the publicly funded research sector declined from 30.32% in 2015 to 23.13% in 2018.

The NRF would not be able to address any of these structural impediments to the promotion of academic research and research of societal application and public value.  The state universities need more qualified teachers and researchers in permanent posts. Rampant feudalism, gender and caste based oppression, lack of culture of collaboration are major obstacles to the climate for research and innovation. The NRF hands over executive control and channel of funding to the governing body with much say for corporate entities with no representation to state governments in the Union Government funds for R&D.

It is important to involve academics from all over the country, the state higher education councils and the line ministries of the Union Government to ensure decentralized decision making. The NRF can undermine the possibility of harnessing the energy of multiple sources of initiatives. Joint planning is a more effective way of realizing diversity and plurality of missions in the world threatened by climate change and inequality.

            AIPSN demands that the “National Research Foundation Bill 2023” be re-examined. This bill should be sent to the Department Related Standing Committee on S&T, Environment and Forests for a comprehensive assessment. The Committee should invite the development authorities, line departments of the union government and state governments, the representatives of organizations working with the scientific community and individuals to submit their views on the Bill. The centralisation of funding, lack of academic oversight, not addressing the existing structural problems, privatisation of funding in NRF Bill needs re-examination and a thorough open scrutiny by the scientific community.

 

For Contact:

Asha Mishra, General Secretary, AIPSN Mobile: 9425302012   Email: gsaipsn@gmail.com

P.Rajamanickam, AIPSN Higher Education Desk Convener, Mobile: 9442915101

 

 

*இந்திய அரசு செய்ததும்,செய்யத் தவறியும் செய்ய வேண்டியதும்.* :

 

tamil-aipsnjsa24thMarch2020statement

*இந்திய அரசு செய்ததும்,செய்யத்  தவறியும் செய்ய வேண்டியதும்.* : 

 மக்கள் ஆரோக்கிய இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை

 (சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் மக்கள் ஆரோக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுந்தரராமன், இரகுனந்தன், சரோஜினி, மற்றும் சுலக்க்ஷனா நந்தி  உள்ளிட்ட முப்பது மருத்துவ நிபுணர்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று தொடர்பாக அலசி ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்கவும் மக்களுக்கு வேண்டியதை எடுத்துக் கூறவும் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் வாராவாரம் அவர்கள் அறிக்கை வெளிவரும். 24.03.2020 தேதியிட்ட அறிக்கையின் சுருக்கம்) 

 

1)உலகளாவிய கொரோனா நோய் இந்தியாவில் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது.  தொற்று நோயுடன் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் வழியாகவும், அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் வழியாகவும் பரவுதல் என்ற  இரண்டாம் கட்டம். இந்தத் தருணத்தில், மத்திய அரசு தக்க நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை தடுத்து நிறுத்துவதில் பலகீனம் இருந்தது  தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.

   

2) *மக்களுக்கு போதுமான விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்காமை*   மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, சாதாரண சளிக் காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சு திணறல்  ஆகிய நோய்கள் தொடர்பான புள்ளி விபரங்களைத் தொகுத்து வெளியிட்டு வந்தது. கொரோனா தொற்று நோய் வேகமாக பரவும் இந்த சூழ்நிலையில் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதிக்கு பிந்தைய   புள்ளி விவரங்களை அரசு வெளியிடவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் கிடைத்திருந்தால் சிகிச்சை அளிப்போருக்கு இது தொடர்பான உண்மை நிலை தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். தங்களை ஆயத்தம் செய்து கொள்வதற்கும் ஏதுவாக இருந்திருக்கும். பரிசோதனைக்காக வருவோர் பற்றி ஓர் மதிப்பீடு கிடைத்திருக்கும். நோய் தொற்று பற்றிய எண்ணிக்கை மீதான பீதி ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. தக்க புள்ளி விவரங்கள்,  தக்க நேரத்தில் கொடுக்கப்பட்டு இருந்தால் மருத்துவ சேவை அளிப்போர் தயார் நிலையில் இருக்கவும், ஒரு பாதுகாப்பு அற்ற நிலையை உணர்வதையும் தவிர்த்திருக்கலாம். இதனால் தற்போது சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் இதர நோயாளிகள் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே வெளி நோயாளிகளைக் கையாள்வதில் மருத்துவ விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சளிக் காய்ச்சல் மூச்சு திணறல் நோய் தொடர்பான புள்ளிவிபரங்களை பொது வெளியில் உடனடியாக வெளியிட வேண்டும். அத்தோடு மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இது  பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் சுகாதாரத் துறை முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

 

 

3) *அரசுக்கு எங்கள் கோரிக்கை* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செம்மையாக   நிறைவேற்ற பரந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். சிவில் சமூகத்தில் தொண்டாற்றி வரும் ஆரோக்கிய இயக்கங்கள் மக்கள் அறிவியல் இயக்கங்கள் தொழிற் சங்கங்கள் ஆகியவற்றை  செம்மையாக இதில் பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு தனிமைப் படுத்துதல் அவசியம் எனினும் அதுவே தீர்வல்ல என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். “தனிமைப் படுத்துதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தொற்று உறுதி செய்தவர்களின் தொடர்பில் இருந்தோரைக்  தேடிக் கண்டறிதல்” என்ற ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ளா விட்டால் ஊரடங்கும் தனிமைப் படுத்துதலும் தற்காலிகமான திறனற்ற முழுயற்ற பணிகளாக முடிந்து விடும். எனவே தனிமைப் படுத்துதல் மட்டுமே முக்கியமான நடவடிக்கை என்று முன்னிறுத்துதல் கூடாது.

‌  4) *குறைந்த பட்ச பரிசோதனை வசதிகளை உத்திரவாதம் செய்க* இந்த வாரத்தில் தான் தனிநபர் பாதுகாப்புக் உபகரணங்களுக்கும்   5000 வெண்டிலேட்டர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சேவைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் படி கூறியுள்ளது. இவையெல்லாம் தேவையான நடவடிக்கைகள் தான். என்றாலும்,  முன்கூட்டியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இப்போது தான் வாரம் ஒன்றுக்கு 60000 பேரை பரிசோதனை செய்யும் அளவு பரிசோதனை வசதிகளை மேம்படுத்த உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று பரவத் தொடங்கியயுள்ள இடங்களில்  பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள் இல்லாமல் அதேசமயம் நோய் தொற்றோடு இருப்பவர்கள், தொடக்க நிலை தொற்றில் இருப்பவர்கள் கடுமையான நோய் தொற்று உடையவர்கள் என எல்லோருக்கும் எல்லா மாநிலங்களிலும் பரிசோதனைகள் செய்யப்பட்ட வேண்டும்.

         5) *மருத்துவ சேவைக்கான உபகரணங்களை உற்பத்தி செய்தல் கொள்முதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் உள்ள நெருக்கடியை அரசு உணர வேண்டும்*  இன்றைய சூழ்லையை நிர்வகிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி, கொள்முதல் மற்றும் அதன் மேலாண்மை ஆகியவற்றில் உள்ள குறைகளை இப்போது தான் அரசு  உணரத் தொடங்கி உள்ளது. ஆனால் மக்களோடு இணைந்து பணியாற்றி வரும் மக்கள் ஆரோக்கிய இயக்கம் மக்கள் அறிவியல் இயக்கங்களில் பணியாற்றி வரும் நாங்கள் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் விதத்தில்  இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு சாதனங்களில் தன்னிறைவு அடைவதற்கு ஏற்ப இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மற்றும் அதன் மேம்பாடு, வணிகக் கொள்கைகள் ஆகியவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம்.  இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில், மருத்துவ சாதனங்களின் தேவை அதிகரித்து வரும் சூழலில், மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்வதும் வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதும் கடினமானதாகவும் தடைகள் மிக்கதாகவும் நம்மால் கொள்முதல் செய்ய முடியாத  நிலைகளிலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசு இனிவரும் காலங்களில் இதனைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

              6) *தனிமைப் படுத்துதல் கண்காணிப்பில் வைத்தல் மற்றும் சமூகத்தில் இருந்து தள்ளி இருத்தல் போன்றவற்றை நடைமுறை படுத்தியதில் உள்ள குறைபாடுகள* நோய் தொற்றைத் தடுக்க தனிமைப் படுத்துதல் கண்காணிப்பில் வைத்தல் சமூகத்தில் இருந்து  தள்ளி இருத்தல் போன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவதில் பெரும் இருக்கும் குறைபாடுகளைக் கண்டு கவலை கொள்கிறோம். வீட்டில் தனித்திருக்க வைக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவ மனை அல்லது தக்க நிறுவன ஏற்பாட்டில் கொண்டு வருவது நல்லதே. ஆனால் இத்தகைய சூழ்நிலையில் மனித மாண்புகள் மற்றும் மனித உரிமைகள் மீறுவதும் நிகழ்ந்துவிட வாய்ப்புகள் அதிகம். இது மனித உரிமைகள் பற்றியும் ஜனநாயகப் பூர்வமாக நடந்து கொள்ளும் அரசுகளில் கூட சாத்தியமே. எனவே சிவில் சமூகத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் அமைப்புகளின் கருத்துக்களை கேட்பதும் அதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியம். உதாரணமாக வெளிநாட்டில் இருந்து மும்பை அல்லது டெல்லிக்கு வந்த ஒருவரை தனிமைப் படுத்துதல் என்ற பெயரில் அனைவர் முன்பும்  முத்திரை குத்துதல் அலைக்கழித்தல் போன்ற செயல்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் தவறு என்று சுட்டிக் காட்டி உள்ளது. இவர்கள் உரிய கௌரவத்தோடு நடத்தப்படவேண்டும். அதேபோல் சந்தேகத்தின் பெயரில் வீட்டில் தனித்து வைக்கப்பட்டிருப்போர் பயந்து வெளியேறி விடும் போது அவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தல், தனித்து வைப்பதற்காக முஷ்டி பலத்தை பயன்படுத்துதல் மருத்துவ சேவை மறுக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்து தங்கள் நோய்களை மறைத்துக் கொள்வார்கள். இது பீதி நிறைந்த எதிர்ப்புக்கும் காரணமாகிவிடும்.

 

     7) *தனிமைப் படுத்துதல் வீட்டில் கண்காணிப்பில் வைத்தல் போன்ற செயல் போன்றவற்றை  நடைமுறைப் படுத்தும் போது சமூக பொருளாதார நிலையில் இருந்து கருத்தில் கொள்ள வேணாடியது*  கொரோனா தொற்றைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்திகள் பெருமளவில்  பரப்பப்பட்டாலும் அது வசதி படைத்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கே அதிகம் பயன்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு அவர் தம் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. தனிமைப் படுத்துதல் உள்ளிட்ட  கொரோனா தடுப்பு நடவடிக்கை செய்திகளை அறிந்திருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். அல்லது தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். இதற்காக இவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. இப்படிக் கூறுவதால் தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

     8) *ஊரடங்கு உத்தரவு நடைமுறைப் படுத்த பட்டபோது எழுந்த கவலை*  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலத்தில் மீறப்படும் மனித உரிமை மற்றும் மனித மாண்புகள் மீறப்படுவது ஒருபுறம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள காலத்திற்கும்  அதன் விதத்திற்கும் உரிய ஆதாரமும் வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். கிடைக்காமல் போய்விடும் என்ற பீதியும்   சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட வேண்டும் என்ற பீதியையும் உருவாக்கியது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களிலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. பெரும்பாலும் கிராமப் புறங்களுக்கு திரும்பிச் செல்லும் இவர்கள் நோய் தொற்றை எடுத்துச் செல்லும் அபாயத்துடனே சென்று சேர்ந்துள்ளனர். ஏற்கனவே பலவீனமான சுகாதார கட்டமைப்பு வசதிகள் உள்ள கிராமப் புறங்களை இது மேலும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்னர்  இதுபற்றி தெளிவான மதிப்பீடு இருந்திருக்க வேண்டும். எப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது போன்ற விசயங்களில் தெளிவான அளவீடு இருந்திருக்க வேண்டும். புற நோயாளிகள் பிரிவை மூடியது போக்குவரத்து இன்மையால் மக்கள் மருத்துவ மனைகளுக்கு சென்றடைய முடியாமல் அவதிப்பட்டது ஆகியவை மிக மோசமான செயல்பாடுகள் ஆகும். எனவே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவும் நிலைமைகளை மதிப்பீடு செய்யவும் தக்க விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலை மக்கள்  குடிபெயர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோர் ஆவர்.ஏற்கவே நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் மேலும் பாதிக்கப்படுவர். பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நிதி மூலதன காரர்களுக்கும் வரிச் சலுகை என்ற பெயரில் அள்ளிக் கொடுத்து விட்டதால் தற்போதைய அவசர நிலைக்கு கூட அரசால் போதுமான நிதி ஒதுக்க செய்ய முடியவில்லை. கல்வி சுகாதாரம் மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே தொடர்ந்து நிதிக் குறைப்பு செய்ததும் தனியார்மயமாக்கியதும் இன்று எழுந்துள்ள பெரும் நோய் தொற்றில் இருந்து பாதுக்க தக்கதொரு நடவடிக்கை எடுக்க இயலாமல் செய்துள்ளது.

 

      9) *21 நாள் ஊடங்கு அறிவிப்பட்ட தருணம் முதல்….* நாங்கள் இந்த அறிக்கையை இறுதிப்படுத்தி  வெளியிடும் நேரத்தில் நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு  சமூக விலக்கம் மட்டுமே என்று முன் நிறுத்த அரசு முனைகிறது. நாங்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல சமூக விலக்கு தற்போதைய தொற்று நோயைத் தடுக்கும் ஒரு செயல்பாடே அன்றே அதுவே முழுமை ஆகாது. ஊரடங்கு மூலம் மட்டுமே பிரச்சினையை தீர்த்து விட முடியும் என்பதற்கு சான்றுகள் இல்லை. அதேசமயம் ஊரடங்கு உத்தரவு இல்லாமல் தென் கொரியா தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறப்பான நோய்க் கட்டுப்பாடு செய்யப்பட்டது. இந்த நாடுகளில் இருந்து இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தை  சுகாதாரத் துறை தயார் நிலையில் வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.இதே காலகட்டத்தில் கொரோனா நோய் தொடர்பான அனைத்து நம்பகமான தேவையான தரமான புள்ளிவிவரங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நோய் தொற்று எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு பரிமாணத்தில் பரவியுள்ளது? எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரவியுள்ளது என்று கணக்கிட்டு அந்தப் பகுதியில் ஊரடங்கு தனிமைப் படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதையும் ஊரடங்கு மூலம் கட்டிப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் மிகுந்த மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டிய   காவல் துறையும் அதிகார வர்க்கமும் கடைபிடிக்கும் கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். காச நோய் , எச்ஐவி உள்ளிட்ட பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள், அத்தியாவசிய சேவைகளைப் பெற விரும்புவோர் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் நேர்ந்துள்ள அவலத்தால் மனம் உடைந்து போய் இருக்கிறோம். இதேபோல் தினக்கூலி பிரிவினர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேற்று மாநிலங்களில் குடி பெயர்ந்து வாழ்பவர்களுக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இன்றி நிற்கின்றனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் ஊரடங்கு மூலம் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிற  இறப்புகளைக் காட்டிலும் கூடுதல் சேதம் இதன் மூலம் விளைந்து விடும். 

   கொரோனா தொற்று நோய் பிரச்சினை தீர்க்கப்படும் வரை  நாங்கள் உருவாக்கியுள்ள நிபுணர் குழு இதுபற்றி அரசுக்கும் மக்களுக்கும் இதுபற்றி எடுத்துக் கூறும் பணியில் செயல்படுவோம்.  சிவில் சமூகக் குழுக்களோடு இணைந்து செயல்படும்.

 தமிழில்: நா.மணி

tamil-aipsn-jsa24thMarch2020statement

கரோனா கிருமியும் கணிதமும்

tvv-coronamath

கரோனா கிருமியும் கணிதமும்

தா.வி.வெங்கடேஸ்வரன்

 

இதுவரை உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் மடிந்தவர்களின் எண்ணிக்கை 9,840.  சீனாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு நாளும் 700 பேர் மடிகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக்கடிக்கு மட்டும் மரணிப்பவர்கள் சுமார் ஐம்பதாயிரம்.

அப்படி என்றால் ஏன் கரோனா வைரஸ் குறித்து உலகளாவிய பீதி?

இலுமினாட்டிகளின் சதி, சந்தை மார்கெட் சரிவு செய்ய சீன பொருளதார யுத்தம், தனது பொருளாதார  தோல்வியை மறைக்க தேவையற்ற பீதியை அரசு செய்கிறது, இயற்கையை மனிதன் வல்லுறுவு செய்வதற்கு பூமி தரும் தண்டனை என்றெல்லாம் பிதற்றல்கள் – சமூக வலைத்தளம் முழுவதும்.  மெய் தான் என்ன?

’நாவல் கரோனா’ தொற்றுகிருமி நூற்றில் வெறும் 1.4% தான் உயிரை குடித்துள்ளது. மற்ற நோய்கிருமிகளைப் பார்க்கும்போது கொஞ்சம் சாதுவான கிருமி தான். ’நாவல் கரோனா’ வைரஸை விட பன்மடங்கு ஆட்கொல்லி கிருமிகள் உள்ளன.

உள்ளபடியே மருத்துவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் ஏன் கரோனாவை கண்டு அஞ்சுகின்றனர்? இதை விளக்கிக்கொள்ள கொஞ்சம் கணிதம் தேவை.

பொது மருத்துவ கட்டமைப்பு

சென்னையின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி.  சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் 12522. தனியார் துறை மருத்துவமனை படுக்கைகள் 8411. ஆக மொத்தம் 21000 என வைத்துக்கொள்வோம்.

ஒரு ஆண்டில் சென்னையில் சாலைவிபத்தில் இறப்பவர்கள் சுமார் 15000; அதாவது ஒரு நாளைக்கு சராசரி 45 நபர்கள். சராசரியாக ஐந்து சாலை விபத்தில் ஒருவருக்கு மரணம்.  அதாவது நாளைக்கு சாலை விபத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 250.  இந்த எண்ணிக்கையில் மருத்துவ மனைகளை நாடும்போது மருத்துவ வசதி, டாக்டர் மருந்து எல்லாம் சிக்கல் இல்லை.

தீடிர் என்று ஒரே நாளில் ஒரு ஆண்டில் நடக்க வேண்டிய மொத்த விபத்தும் நடந்து விடுகிறது எனக் கொள்வோம். அப்படி நிகழ்ந்தால் அந்த ஒருநாளில் மட்டும் மருத்துவமனையில் வந்து குவிவோர் எண்ணிக்கை 75000. இதில் பலருக்கு சிறு காயம் தான் ஏற்பட்டு இருக்கும். காயத்தை சுத்தம் செய்து கட்டு போட்டால் போதும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சிலருக்கு மூளை அறுவை சிகிச்சை வரை தேவைப்படும். குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் பேரையாவது மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டிவரும். ஆனால் அரசு தனியார் மருத்துவமனைகளில் கைவசம் உள்ள மொத்த இடம் வெறும் 21000.

இதில் பல படுக்கைகள் ஏற்கனவே சிகிச்சை பெறும் நோயாளிகளின் வசம் இருக்கும். எல்லா டாக்டர்களும் விபத்து பிரிவுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. விபத்து நடந்தால் போட வேண்டிய மருந்துக் கட்டு பொருள்களுக்கு தட்டுபாடு வந்துவிடும். அதாவது இருக்கும் மருத்துவ கட்டமைப்பு தாங்க முடியாமல் போய்விடும். பலரும் சிகிச்சை தர வழியின்றி மடிந்து போவர்கள். இவர்களில் பலரை எளிதாக காப்பாற்றி இருக்கமுடியும்.

ஆண்டுமுழுவதும் சீராக இதே அளவு விபத்து நடந்தபோது சிக்கல் இருக்கவில்லை. அவ்வப்போது சற்றே பெரிய சாலைவிபத்து ஏற்படலாம் என்றாலும் ஒரு ஆண்டில் ஏற்படும் அளவு விபத்து ஒரே நாளில் நடந்துவிடாது. சாலை விபத்து தொற்றி பரவாது. பாம்புக்கடி தொற்றிபரவாது ஆனால் பெயருக்கு ஏற்ப தொற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றி பரவும். இது தான் தொற்றுநோயின் சிக்கல்.

தொற்று பரவு விகிதம்

ஒவ்வொரு தொற்றுநோய் கிருமிக்கும் முக்கியமாக இரண்டு குணங்கள் உண்டு. முதலாவது தொற்று பரவு விகிதம் எனப்படும் R0 (ஆர் நாட் என உச்சரிப்பார்கள்). கிருமி தொற்று உள்ள ஒருவர் இயல்பாக சராசரியாக எவ்வளவு பேருக்கு இந்த கிருமி தொற்றை தர வாய்ப்பு உள்ளது என்பதே தொற்று பரவு விகிதம்.

நாவல் கரோனா வைரஸ் கிருமி தொற்று உள்ளவரிடமிருந்து வெறும் ஆறு அடி தொலைவு தான் செல்ல முடியும். எனவே தான் பலர் ஒன்று கூடி சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளி சுமாராக ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். காற்றில் பரவும் தட்டமை நூறு மீட்டர் வரை பரவும். இரண்டாவதாக, எவ்வளவு நேரம் ஒம்புயிர்க்கு வெளியே அந்த வைரஸ் சிதையாமல் செயல்படும் தன்மை கொண்டு இருக்கும். தட்டமை பல மணிநேரம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் கரோனா வைரஸ் காற்றில் வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே செயலூக்கத்துடன் இருக்கும். எனவே இரண்டு தன்மையையும் சேர்த்து பார்க்கும்போது கரோனா வைரசை விட தட்டமை பரவு விகிதம் கூடுதலாக இருக்கும் எனக் கூறத்தேவையில்லை.

இது சராசரி என்பதை நினைவில் கொள்க. சிலர் மிக பரப்பர்கள் (சூப்பர் சஸ்பிரெட்டர்கள்) என அழைக்கப்படுகின்றனர். தென்கொரியாவில் மத நிறுவனத்தை சார்ந்த ஒரு தனி பெண் மட்டுமே 37 பேருக்கு நாவல் கரோனா வைரசை தொற்று செய்துள்ளார். சராசரியைவிட கூடுதல் மனிதர்களுடன் அண்டி பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் கூடுதல் நபர்களுக்கு கிருமியை பரப்புவர்கள். இவையெல்லாம் விதிவிலக்கு.

ஆட்கொல்லி திறன்

ஒவ்வொரு கிருமியும் நோயை ஏற்படுத்தினாலும் நோய் கண்டவர்கள் அனைவரும் மடிந்து விடமாட்டார்கள். சில கிருமிகள் கூடுதல் அளவு உயிர்களை குடிக்கும். ஆண்டுதோறும் பருவ களத்தில் ஏற்படும் ஃப்ளு போன்ற தொற்று கிருமிகள் மிக மிக குறைவான உயிர்களை தான் காவு கொள்ளும். இதனை ஆட்கொல்லி திறன் என்பார்கள். அந்த கிருமி பரவி அதன் வழியாக ஏற்படும் மரண விகிதம். எந்த வித சிகிச்சையும் இன்றி விட்டுவிட்டால் ஒரு கிருமியின் ஆட்கொல்லி திறன் கூடும். மருத்துவ கண்டுபிடிப்பு சிகிச்சை முதலியவற்றின் தொடர்ச்சியாக பல கிருமி நோய்களின் ஆட்கொல்லி திறனை குறைத்து விடலாம். போதுமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால் இறப்பு விகிதம் கூடும் என்பதை கூறத் தேவையில்லை.

கிருமி தொற்று உள்ளது என உறுதியாக தெரிந்தவர்கள் எண்ணிக்கை; அந்த கிருமி தொற்றின் காரணமா ஏற்படும் மரணம் இரண்டின் விகிதம் -ஆட்கொல்லி விகிதம் – case fatality rate- CFR என்று அழைக்கப்படும்.

கிருமிகளின் ஒப்பீடு:

ஒருசில தொற்று கிருமிகளின் குணங்களை இங்கே ஒப்பிட்டு பார்ப்போம்.

நாவல் காரனோ வைரஸ்  R0 2.6  CFR 1.4

சிற்றம்மை R0 3.5–6 CFR 0.003

போலியோ R0 5–7 CFR 5%

பெரியம்மை R0 3-4  CFR 30%

தட்டம்மை R0 12–18  CFR 1·3%

மேர்ஸ் கரோனா வைரஸ் R0 0.3–0.8 CFR 34.4%

சார்ஸ் கரோனா வைரஸ் R0 2–5 CFR 11%

எபோலா R0 1.5–2.5 CFR 90%

ஸ்பானிஷ் ஃப்ளு R0 1.4–2.8   CFR 2.5%

பருவ கால ஃப்ளு R0 1.3  CFR 0.1%

மேலே உள்ள எண்ணிக்கைகள் எல்லாம் சற்றேறக்குறைய மதிப்பீடுகள்.

 

தொற்று பரவு வேகம்

எந்த வித கட்டுப்படும் இல்லை என்றால் கரோனா வைரஸ் சராசரியாக 2.6 பேருக்கு பரவும். அந்த புதிய கிருமி ஏந்திகள் அடுத்து பரப்பும்போது மூன்றாம் பரவலில்  6.76 பேருக்கு பரவும் ( 1x 2.6 x  2.6). நான்காம் பரவலில் 17.576 (1x 2.6 x 2.6 x 2.6). பரவும் வேகத்தை பாருங்கள். பன்னிரெண்டாம் பரவலில் 95428 பேர் அதாவது சுமார் ஒரு லட்சம் பேருக்கு பரவி விடும். ஒவ்வொரு பரவலின் போதும் புதிதாக உருவாகும் கிருமி தீண்டிய நபர்களின் எண்ணிக்கை:-

1

2.6

6.76

17.576

45.6976

118.81376

308.915776

803.1810176

2088.27064576

5429.503678976

14116.7095653376

36703.44486987776

95428.956661682176

 

பன்னிரெண்டாம் பரவல் வரை கிருமி பரவியவர்களின் கூட்டுத் தொகை மொத்தம் 1,55,070 என்று ஆகும். 1,55,070 என்பது சென்னையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் ஒன்றரை சதவிகிதம்.  கிருமி பரவியவர்களில் சுமார் 80% சதவிகித்தினர் ஜலதோஷம் போன்ற வியாதி மட்டுமே ஏற்படும். இவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை தேவையில்லை. ஆனால் மற்ற 20% மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். 1,55,070 பேரில் இருபது சதவிகிதம் என்பது 31014. இவர்கள் அனைவருக்கும் போதிய படுக்கை வசதி கூட மருத்துவமனைகளில் இருக்காது. இதில் சுமார் 7,288 பேர் சிக்கல் மிகுந்த சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருப்பார்கள்.

இதனைத்தான் அதிவேகமான  பன்மடி பெருக்கம் அல்லது எசஸ்பொனன்ஷியல் பெருக்கம் என்பார்கள்.

இந்த கிருமி ஏற்படுத்தும் நோய் ஒன்றும் நமக்கு அவ்வளவு புதியது அல்ல. பெரும்பாலும் நிமோனியா மற்றும் கடும் நிமோனியா, சுவாச கோளாறு நோய்கள் தாம். எனவே ஏதோ நமது கண்ணை கட்டிவிட்ட நோய் அல்ல. ஆயினும் கிடுகிடுவென நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் மருத்துவ மனைகள் ஸ்தம்பித்து விடும். இது தான் சிக்கல்.

வழக்கத்தைவிட கூடுதலாக குவிந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தான் பத்தே நாளில் ஆயிரம் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட நவீன கரோனா மருத்துவமனைகளை சீனாவில் வூஹான் நகரில் கட்டி எழுப்பினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ஒரு தொற்று நோய் பருவ கால ஃப்ளு. இதிலும் மரணம் சம்பவிக்கும்.  அதன் பரவு விகிதம் 1.3. பன்னிரண்டு பரவல் ஏறபடும்போது கிருமி பரவியவர்களின் மொத்த கூட்டு தொகை எவ்வளவு தெரியமா? வெறும் 96 பேர்!

எனவே தான் ஆண்டு தோறும் ஏற்பட்டாலும் ஃப்ளு ஒரு பெரிய பொதுசுகாதார சவால் இல்லை.

 

சங்கிலியை உடை பரவும் வேகத்தை குறை

கிருமிதொற்று உள்ளவர் மற்றவர்களை பதினாலு நாட்கள்  தனியே இருந்து மற்றவர்களை சந்தித்து பரப்பவில்லை என்றால் அவரால் அதன் பின்னர் கிருமி பரப்ப முடியாது. அதுவரை மட்டுமே அவரது உடலில் கிருமி இருக்கும். அதன் பின்னர் ஒழிந்துவிடும். அதற்க்கு பின்னல் அவரையும் அந்த கிருமி அண்டமுடியாது.

அடுத்ததாக கிருமி தொற்றதவர்கள் வெளியே வந்து கிருமி தொற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்காமல் தனிமையை கடைபிடித்தால் தோற்ற ஆளில்லாமல் வேகம் குறைந்து விடும்.

இதனால் தான் தனிமையை கடைபிடித்து சமூக விலக்கம் செய்து கொள்வது உசிதம். உங்களிடம் ஏற்கனவே கிருமிதொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் வெளியே வராமல் இருந்தால் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தலாம்.

மேலும் வெளியே செல்ல வேண்டிவந்தால் மற்றவர்களிடமிருந்து “பாதுகாப்பான” தூரம், அதாவது ஒருமீட்டர் சமூக தொலைவு கையாள்வது என்பன மூலம் சங்கிலியை உடைக்கலாம். சங்கிலி உடைபட்டால் கிருமி பரவும் வேகம் வெகுவாக மட்டுப்படும். ஒவ்வொரு நாளும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சமாளிக்கும் அளவாக இருக்கும் மருத்துவர்கள் பெரும்பாலான நோயாளிகளை காப்பாற்றி விடலாம். இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோய் நிமோனியா போன்ற சுவாச நோய். எனவே அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஒருசிலர் மட்டுமே தீவிர நெருக்கடி நிலைக்கு செல்வார்கள்.

 

ஊர் கூடி தேர் இழுத்தல் தான் வெற்றி

1918 இல் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு காய்ச்சலில் இந்தியாவில் மட்டும் ஒருகோடியே எழுபது லட்சம் பேர் மடிந்தார்கள் என்கிறது வரலாறு. காட்டுத்தீ போல பரவும் தொற்று நோயின் சங்கிலியை உடைகாததான் விளைவு. இன்று நமக்கு தொற்று நோய் குறித்து கூடுதல் அறிவு உள்ளது. அறிவோடு செயல்படுவது அவசியம்.

மனித உடலுக்கு வெளியே இந்த கிருமிக்கு ஆயுள் இல்லை. சில நாட்களில் மடிந்து விடும். பதினான்கு நாட்கள் தான் ஒரு மனிதனில் இருக்க முடியும். எனவே இந்த கிருமி ஒவ்வொரு நாளும் புதிய புதிய நபர்களை தொற்றிக்கொள்ள தேடும். எனவே  இந்த கிருமியை வெல்ல வேண்டும் எனில் போரினை மருத்துவ மனைகளில் அல்ல நமது வீட்டிலும் ரோட்டிலும் நடத்த வேண்டும். மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மட்டுமல்ல நீங்களும் நானும் கூட போரில் முக்கிய கன்னி. நாம் கிருமியை பரப்பும் ஆளாகவும், கிருமியை ஏந்தும் ஆளாகவும் இல்லாமல் இருக்க செய்துவிட்டாலே போதும்.

நமது உடலுக்குள் கிருமிக்கு எதிரான போர் நடக்கும். டிசெல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் கிருமியை ஒழிக்க போரிடும். ஊட்ட சத்து மிகுந்த உணவு, ஓய்வு முதலிய போதும். வெகு சிலருக்கு வேண்டிலேடர் உதவி வரை மருத்துவம் தேவைப்படலாம். ஆயினும் இந்த கிருமிக்கு எதிரான போர் சமூகம் சார்ந்தது. இந்த கிருமியை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும்.

கிருமி பரவும் வேகம் தான் முக்கிய ஆபத்து. எனவே அதன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதாவது செயற்கையாக தொற்று பரவு விகிதத்தை குறைக்க வேண்டும். இயற்கையாக பரவும் விகிதம் 2.6 என்பதை ஒன்றுக்கும் குறைவாக கொண்டு வந்து விட்டால் இந்த கிருமி உலகிலிருந்து அடியோடு அழிந்து விடும். இதுவே இந்த கிருமிக்கு எதிரான போரை வெல்லும் சூட்சுமம்.

கரோனா வைரஸ் கிருமி பரவும் தொலைவு வெறும் ஆறு அடி தொலைவு தான். எனவே கூடி நெருங்கி குவியாமல் ஒருவருக்கு ஒருவர் இடைய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டால் கிருமி தொற்று வேகத்தை குறைத்து விடலாம். பலர் வீட்டிலேயே இருந்தால் அவர்களுக்கு கிருமி பரவும் வாய்ப்பு குறையும். சங்கிலி அறுபடும். முடிந்தவரை வீட்டில் இருந்தால் கொஞ்சமாவது பரவும் வேகம் தணியும். அடிக்கடி கையை கழுவி சுத்தம் செய்துகொண்டால் கிருமி நம்முள் புகும் வாய்ப்பை மட்டுப்படுத்தலாம். இருமல் தும்மல் வழி பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இருமல் தும்மல் போது வாயை மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொண்டால் மற்றவர்களுக்கு வைரஸ் போவதை தடுக்க முடியும்.

இந்த கிருமி தாக்கி கடும் நோய் ஏற்படுபவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களாக இருப்பார்கள். ஏழைகளிடம் பொதுவே ஊட்ட சத்து குறைவு இருக்கும் என்பதால் கூடுதல் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வை குறித்து கூடுதல் கவலை கொண்டவர் எனில் இந்த கிருமி தொற்று நோய் பரவல் குறித்து அதிக கவலை கொள்ளவது அவசியம்.

லதா மேடங்களும், பிரபலங்களும் இந்த நோய்கிருமி குறித்து பரப்பும் போலி மக்கள் நல்வாழ்வுக்கான இந்த சமூக போரில் பின்னடைவு தான் ஏற்படும். கைதட்டினால் கிருமி செத்துவிடும் போன்ற போலி செய்திகள் அவற்றை நம்புபவர்கள் இடைய சுயதிருப்தி மனப்பான்மையை ஏற்படுத்தி வரப்போகும் சங்கடங்கள் பற்றி ஏதும் கவலையற்ற போக்கில் எச்சரிக்கையின்றி செயல்பட தூண்டும். இதன் காரணமாக கிருமி பரவல் வேகம் பெரும். கிருமிக்கு போரில் வெற்றி கிட்டும்.

அறிவியல் பூர்வமான தகவல்களும், அறிவியல் பார்வையும், ஒட்டுமொத்த சமூக திரட்டலுமே கரோனா கிருமிக்கு எதிரான போரில் நமது ஆயுதங்கள்.

போலிகளை பரப்பாதீர்கள், அறிவியலை பேசுங்கள். மக்கள் உயிர்களை காப்பாற்றுங்கள். கிருமி பரவும் சங்கிலியில் உடைப்பு ஏற்படுத்துங்கள்.

TN Academicians appeal to the public on the eve of Elections 2019

TN Academicians appeal to the public on the eve of Elections 2019

*Vote for Constitutional Values, Diversity and Inclusive Society
*Prevent Suicidal Increase of Economic Inequality
*Vote for creating a Healthy, Rational and Scientific Tamil Nadu and India

Dear Friends,
In a few weeks from now, we would elect the 17th Lok Sabha. This is an important duty that would determine our country’s future and that of the “Idea of India”.

We, as academics, work or have worked in institutions of research and learning. These institutions of learning and research are the places where different schools of thought have to contend, with freedom and without fear. In contrast, a climate of fear has been created in institutions of higher education that discourages questioning and critical thinking.

From the systematic attacks on independent academic functioning in highly regarded universities like JNU to what has been described as the institutional murder of Rohith Vemula at the Central University of Hyderabad, central universities are being obstructed when discharging their academic duties. From unacceptable threats to criminal physical assault, a range of coercive measures have been unleashed by the elements seeking to destroy pluralism, secularism and diversity which are so central to the idea of India. Atrocities against religious minorities, dalits and women in the name of upholding “nationalism” have been witnessed in other universities too, including in Delhi, Rajasthan, Chandigarh, Jadavpur, Allahabad, the BHU and the AMU and many other places

These atrocities, deplorable as they were, are known to have happened under instigation and support of the ruling party at the centre and its ministers. The elements executing these atrocities have unfortunately been protected and encouraged by the ruling dispensation.
While these above events are visible, a surreptitious attempt is going on to change the character of our institutions, in various ways: by appointments of heads of institutions, by curbing funds, by ensuring promotion of obscurantist ideas, etc.
The NCERT has taken up the task to promote the RSS’s pet projects to introduce in the text book, topics of dubious provenance and has recently removed chapters that include accounts about peasants and farmers and class and caste relations and struggles. In the area of higher education, the appointment of a person known for his links to the RSS, as the Vice Chancellor of the prestigious Jawaharlal University is a prime example of the ruling government’s assault on higher education. It is to be noted that 93% of the JNU faculty had protested against this Vice-Chancellor’s undemocratic methods.
The system of higher education is being greatly weakened by the promotion of obscurantism, irrationality and aggressive communalism by the ruling dispensation.

Equally important, the regime’s policies involve the most aggressive privatization, centralization and corporatization of education, as seen in their New Education Policy and the HECI Bill, both of which have met widespread public protest. These lay bare the plans to place academic bodies at the mercy of the government.

An appointee of the NDA government, Chairman of the Indian Council of Social Science Research targets eminent intellectuals critical of the wrong doings of the regime just as the finance minister the other day accused more than a hundred distinguished economists seeking greater credibility and transparency of government statistical bodies of being “fake” economists.
Senior researchers as well as doctoral scholars get little funding for quality research. This is true not just in social sciences but also in natural and physical sciences.

The government makes tall claims of India being made a Superpower but does not spend even 0.6% of the GDP on Science and Technology.
Beyond the world of academia, the regime’s economic policies have caused massive destruction of livelihoods in the informal sector which accounts for more than 90% of our workforce and more than 40% of our national output.

The draconian act of demonetization and the ham handed introduction of GST have caused havoc. They have led not only to a decline in the rate of growth of GDP, but a massive growth in unemployment by destroying the employment-intensive informal sector. Unemployment is soaring, as revealed both by the most recent government survey report (the release of which has been blocked by the government) and the private agency the Centre for Monitoring the Indian Economy (CMIE).
More than a hundred people died in the aftermath of demonetization while not a penny of black money was recovered. Across rural India, the agrarian crisis has worsened, with a steep fall in prices of agricultural produce even while farmers in hundreds of thousands have marched across the nation seeking justice and an end to policies that compel famers to commit suicide.

In the past five years the ruling dispensation has subverted the constitution and various democratic institution rights from Supreme Court to RBI. Even the election commission has not spared. The ruling party has used the colonial law on sedition to surprise voices of dissent.
While the situation is grim, it is not without hope. The struggles of the farmers, the massive protests of various sections of employees and workers, both in the states and at the all India level, of women, of dalits and the scheduled tribes, of religious minorities under murderous attack from goons patronized by the ruling dispensation – all these give us hope in the resilience of the Indian people. But we cannot be complacent.

We, the socially concerned academics, whose education has been made possible by the taxes that our working people pay when they buy any good or service, owe it to them and to ourselves to ensure that India remains secular and democratic and its higher educational system gets strengthened in its pursuit of science and critical inquiry. We cannot allow people who express dissent or question the system to be termed anti-nationals.

The first step in this process is to ensure that the coming elections result in a regime that stands by the Constitution of India. The Indian constitution, the product of our freedom struggle, proclaims in the preamble, India to be a Secular, Sovereign, Socialist, Democratic Republic.
The rise of organized regressive forces in the last several years – committed to destroying the Constitutional values – has to be challenged and stopped forthwith without any reservation.

List of signatories 1. Dr.M. Anandakrishnan, Former Vice-Chancellor Anna University, Chennai, Former Chairman IIT Kanpur. 2. Justice Hari Paranthaman, Former Judge of Madras High Court, Chennai. 3. Mr. M.G. Devasahayam, I.A.S (Retd), 4. Dr. S. S.Rajagopalan, Educationist, Chennai. 5. Dr.V. Vasanthi Devi, Former Vice-Chancellor, MS University. 6. Dr.M. Rajendran, Former Vice-Chancellor Tamil University. 7. Dr.K.A. Manikumar, Ex. Vice-Chancellor, Swami Vivekanda University, M.P. 8. Mr. R. Poornalingam, I.A.S (Retd), 9. Mr. P.Vijayashankar, Editor, Frontline. 10. Dr.S. Sathikh, Former Vice-Chancellor University of Madras. 11. Dr. Ponnavaiko, Former Vice-Chancellor, Bharathidasan University. 12. Dr. S.Theodore Baskaran, Writer. 13. Mr. P.B. Prince Gajendra Babu, Educationist, General Secretary, SPCSS. 14. Dr.K. Nagaraj, Professor (Retd) MIDS, Chennai . 15. Dr. R. Ramanujam, Professor, Institute of Mathematical Sciences, Chennai. 16. Dr. Enakshi Bhattacharya, Professor, IIT Madras, Chennai. 17. Dr, Ayan Mudhopadhyay, Associate Professor, IIT Madras, Chennai. 18. Dr. Suresh Govindharajan, Professor IIT Madras, Chennai. 19. Dr.K. Jothi Sivagnanam, Professor, Dept of Economics, University of Madras. 20. Dr. Sridhar, Economist, Frontline. 21. Dr. Y. Srinivasa Rao, Professor, Bharathidasan University, Tiruchirappali. 22. Dr.V.B. Athreya, Economist, Professor (Retd) Bharathidasan University. 23. Dr.R. Kaleeswaran, Professor, Dept of Art and Literary, Loyola college, Chennai. 24. Dr. V.Jeevanandam, Environmental Activist cum Medical Doctor. 25. Dr. C.S. Rex Sargunam, Medical Doctor and President, Tamil Nadu Health Development Association. 26. Dr.Era. Natarasan , Science Writer and Educationist. 27. Mr.Su.Ki. Jayakaran , Geologist and Writer. 28. Dr.S. Janakarajan, Professor (Retd), MIDS. 29. Dr.T. Chandraguru, Professor (Retd) and Former Syndicate Member, MKU 30. Dr.S. Kochadai, Professor and writer. 31. Dr.G.C.Manoharan, Librarian (Retd), Mannar Thirumalai Nayakar. college, Madurai 32. Prof.S. Mohana, Professor (Retd), Palani Aandavar Arts college, Palani. 33. Dr. R. Murali, Professor (Retd) and Former Principal Madura College, Madurai. 34. Dr.V. Natarjan, Scientist (Retd), IGCAR, Kalpakkam . 35. Prof. S. Ramasubramanian, Writer, Professor (Retd), Government Arts College, Tiruvannamalai. 36. Dr.K. Ramakrishnan, Professor (Retd), Bharathiar University 37. Dr.Mu Ramaswamy, Dramatist, Professor (Retd), Tamil University. 38. Dr. R. Rukmani, Scientist (Retd), MSSRF, Chennai. 39. Dr. A. Sankarasubramanian, Professor (Retd), Government Arts College, Salem. 40. Dr. S. Sankaralingam, State Vice President, PUCL. 41. Dr.V. Sridhar, Scientist (Retd), IGCAR, Kalpakkam. 42. Dr.Mu. Thirumavalavan, Former Principal Government Arts College, Viyasarpadi, Chennai. 43. Dr.R. Usha, Professor (Retd), Madurai Kamaraj University. 44. Prof. P. Vijayakumar (Retd), Saraswathi Narayan College, Madurai 45. Prof. Prabha Kalvi Mani, Makkal Kalvi Eyakkam. 46. Prof.A. Marx, Writer, Chennai 47. Dr.R. Chandra, Professor (Retd), UD College, Thiruchy. 48. Prof. K. Raju, Editor, Pudhiya Aasiriyan. 49. Dr. V. Ponraj, Former Principal, MTT Hindu College, Tirunelveli. 50. Dr. A.James Willams, Professor (Retd) and Former All India President, AIFUCTO. 51. Dr. I.P. Kanagasundaram, Former Principal, District Institute of Education and Training. 52. Dr. P. Rathnasabhapathi, Retired Professor of Tamil, Chennai 53. Dr. P.Murugaiyan, Principal (Retd), Sivanthai College of Education, Chennai. 54. Dr. S. Jayshankar, Principal (Retd), Sri Vasavi College, Erode. 55. Dr. S.Hema, Professor (Retd), Holycross College, Trichy. 56. Dr. V.Murugan, Professor (Retd), Vivekanandha College, Chennai.

Appeal Move Initiated By: 57. Dr. S. Krishnaswamy, Senior Professor (Retd), Madurai Kamaraj University. 58. Prof.P. Rajamanickam (Retd), Saraswathi Narayan College, Madurai and General Secretary AIPSN 59. Dr. N. Mani, Professor and Head, Dept of Economics, Erode Arts college, Erode. 60. Dr.T.R. Govindarajan, Professor (Retd), Institute of Mathematical Sciences Chennai.

People’s Manifesto on Literacy and Education of AIPSN and BGVS

People’s Manifesto on Literacy and Education

Please see here in EnglishHindi , Odiya , Tamil , Telegu

of All India People’s Science Network and Bharat Gyan Vigyan Samiti.
AIPSN and BGVS have been doing an all India campaign by conducting Jan Shiksha Samvad (People’s Education Dialogue) at village, Panchayat, Block and District level in 23 States of India.
The State Level Samvad will be 10 th 14th April in State Capital of 23 States.
Individuals and organisations are requested to endorse the Manifesto.
President and Secretary   President and Secretary
BGVS                                     AIPSN

கல்விக்கான தேர்தல் கோரிக்கைகள்

கல்விக்கான தேர்தல் கோரிக்கைகள்

பள்ளிக் கல்வி:  (School Educational Manifesto)

தேசிய அளவிலான கோரிக்கைகள்

  1. அரசியல் சாசனத்தின் கடப்பாட்டுக்குட்பட்டு கல்வி தொடர்பான அனைத்துக் கொள்கை முடிவுகளையும் மேற்கொள்வது
  2. கல்வி முறைமையில் அனைத்து சீர்திருத்தங்களையும் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதசார்பின்மையை அடிப்படையாகக் கொண்டுமேற்கொள்வது. சமூக நீதியும் சமவாய்ப்பும் தவிர்க்க இயலாத கூறுகள் என்பதை மனதில் கொள்வது.
  3. உலக அளவில் குழந்தைமை பருவமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 18 வயது வரை இலவசக் கட்டாயக் கல்வியை அளிக்கும் வண்ணம் கல்வி உரிமைச் சட்டத்தினை விரிவுசெய்தல் இதன் மூலம் முன்பருவக்கல்வி, பள்ளிக்கல்வி மேநிலைக்கல்வி போன்றவற்றை சட்டபூர்வ உரிமையாக்குதல்.
  4. கல்வி உரிமைச்சட்டத்தின் உட்கூறுகளாக உள்ள அனைத்தையும்   அதன் உண்மையான பொருளில் உள்வாங்குதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதை  அரசின்  பொறுப்பாக்குதல்
  5. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ( தாழ்த்தப்பட்ட,மலைசாதி, பெண்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பேச வாய்ப்பு மறுக்கப்படும், மற்றும் சிறுபான்மை மக்கள்)  கல்வி அளிக்கும் கல்விக்கொள்கைகளை சரியான முறையில் கூராய்வு செய்து  சீர்திருத்தும் பணியை நேர்மையாக  நடைமுறைப்படுத்துதல்
  6. தலித் மற்றும் மலைவாழ் மக்கள், சிறுபான்மையின குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை  தொடர் கண்காணிப்பின் மூலம்  நனவாக்குவதற்கான நேர்மையான நடவடிக்கைகளை உறுதிசெய்தல்.
  7. பெண்கள், சமத்துவமின்மையை எதிர்கொண்டு தங்கள் சமூகத்தில் தமது  நிலையினை உயர்த்திக்கொள்வதற்கான தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்ளும் ஏற்றம் தருவதாக  கல்வி அமையவேண்டும்.
  8. குடும்ப நிறுவனங்களில் நேரும் குழந்தை உழைப்பை சட்டபூர்வமாக்கும் குழந்தை தொழிலாளர் சட்டம் ( தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்)  பிரிவு 3 ல் 2016 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை நீக்குவதன் மூலமாக 18 வயது வரை குழந்தைகள் தொழிலாளாராவதை முற்றிலும் ஒழித்தல்.
  9. கல்வியில் சமத்துவமின்மையினை ஏற்படுத்தும் வசதிக்கேற்ற பல்வேறு பள்ளிய முறைகளை நிக்கி பொதுப்பள்ளிகளை உறுதிசெய்தல்.
  10. உலக அளவிலும், பல்வேறு தேசிய குழுக்களிலும், கோத்தாரிக் கல்விக்குழுவிலும் வரையறுக்கப்பட்டுள்ள தேசிய மொத்த வருமானத்தில் 6% கல்விக்கு செலவிடுவதை உறுதி செய்தல்.
  11.  குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையின் முதுகெலும்பாய் உள்ள கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 16 ஐ மீளச்செய்தல். பள்ளிகளின் கட்டுமானம் உள்ளிட்ட கற்றல் சூழலை உறுதிசெய்தல். . இதனைவிடுத்து ஒட்டுமொத்த கல்விமுறைமையின் தோல்வியினை ஒரே அடியாக  குழந்தைகள் மேல் திணித்து பள்ளியை விட்டுத் துரத்தாதிருத்தல்.
  12.  கல்வி அளிக்கும் செயலில் லாப நட்டம் பாராது பள்ளிகளை மூடும் செயலை உடனடியாக நிறுத்துதல். கல்வி உரிமைச்சட்டம் 2009 க்கு  பிறகான காலத்தில் மூடப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட பள்ளிகளை மீண்டும் தனித்தனியாக செயல்படவைத்தல்.
  13. வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்தல்.
  14. ஆசிரியர்களின் தொழில்சார் வளங்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக பயிற்சிகளை உறுதிசெய்தல்.
  15. ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்து சுரண்டும் போக்கை கைவிடவேண்டும்.
  16.  தேசிய கலைத்திட்டம் அரசியல் சாசனத்தின் குறிக்கொளுக்குட்பட்டு அரசியல் சாசனம் வகுத்துள்ள விழுமியங்களை அடையும் விதமாக தேசிய கலைத்திட்டத்தினை சீரமைத்தல்.  நாட்டின் பன்முகத் தன்மையினைப் புரிந்துகொண்டு தாய்மொழியினை கற்கும் மொழியாகக் கொண்டு  கற்கும் விதமாகக் கலைத்திட்டத்தினை வடிவமைத்தல். எந்த ஒரு தனிப்பட்ட மொழியையும் நாடு முழுமையிலுமுள்ள குழந்தைகள் கற்கத் திணிக்காதிருத்தல். கல்வியில் மேற்கொள்ளப்படும் அனைத்து மத ரீதியான தலையீடுகளையும் எதிர்த்தல். குழந்தைகளின் விமரிசனபூர்வமான எண்ணங்களையும், பிரதிபலிப்புகளையும் உருவாக்கிகொள்ளும் திறனை வளர்ப்பதன் மூலம் வரலாற்றை இனம் சார்ந்ததாகப் பார்க்காமல் தரவுகள் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை வளர்த்தல்.அறிவியல் முறையினையும் அறிவியல் மனப்பான்மையினையும் குழந்தைகளிடையே வளர்த்தெடுத்தல். வயதுக்கேற்ற வகையில் செய்துபார்த்துக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.
  17.  பள்ளிக் கல்விக்கும்  மேநிலைக் கல்விக்கும் இடையே இயற்கையான தொடர்புகளை நிறுவுதல். இதன் மூலம் இடைநிற்றலைக் குறைத்தல்
  18.  அதிகாரப் பரவலை உறுதிசெய்வதன் மூலம் நிர்வாகத்தினை நெகிழ்வானதாக்குதல்.
  19. புதிய கல்வித் தொழில்நுட்பம் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிசெய்தல்
  20. ஆசிரியர்கள் தொழில்சார் நிபுணர்களாகும் வண்ணம் ஆசிரியர் கல்வியை புணரமைத்தல்.
  21.  அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஜனநாயக உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள்  அதிகரிக்கப்படவேண்டும்
  22. மாணவர்களுக்குத் தரப்படும் மதிய உணவின் தரம் மேம்படுத்தப்பட்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரை மதிய உணவுத்திட்டம் விரிவாக்கப்படவேண்டும்
  23. சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான கவனிப்பும் கல்வியும் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும்.
  24. எழுத்தறிவின்மையை அகற்ற சமூகம் முழுமையும் பங்கேற்கும் எழுத்தறிவு இயக்க முயற்சிகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்.
  25. மக்களின் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு விரிவான கல்விக்கான கொள்கையை உருவாக்குதல்.
  26.  கல்விக்கூடங்களை வழிநடத்துவதில் உள்ளூர் சமூகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஈடுபாட்டை உறுதிசெய்தல்.
  27. அரசின் அனைத்துவிதமான திட்டங்களையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை சமூகத் தணிக்கை செய்யும் முறைமையினை உருவாக்குதல்.

தமிழகத்தைப் பொறுத்தவரை

  • ஆசிரியர்களின் பணித்திறனை சீரழிக்கும், பள்ளிகளை இணைக்கும், ஆசிரியர்களை தரம் இறக்கும் சீர்திருத்த முயற்சிகளை உடனடியாக கைவிடுத்தல்.
  • கல்வித் துறையின் அனைத்துத் துறைகளும் கூடுதல் ஒருங்கிணைப்போடு செயலாற்றுதல்.
  • செயல்வழிக்கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டினை அதன் உண்மையான பொருளில் செயல்படுத்துதல்
  • ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு போன்ற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அச்சமூட்டும் நடவடிக்கை இனியும் கூடாது.
  • பாடப்புத்தகங்களை வடிவமைப்பதில் மன வயதுக்கேற்ற வகையில் கருத்துத்திணிப்பில்லாமல் உருவாக்குதல்
  • பாடப்புத்தகங்களை கள அளவில் பரிசோதித்து வடிவமைத்தல்.
  • ஆசிரியர்களின் பணிச்சுமையைக் கணக்கில் கொண்டு திட்டங்களை படிப்படியாக அமல் படுத்துதல்.
  • உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை பகுதி நேரமாகவாவது பணியமர்த்துதல்.

—————————————————————————————————————————–

எங்கள் தேசம்

எல்லோருக்குமான தேசம்

ஜனவரி 2019

கடந்த ஆண்டு 2016 நவம்பர் முதல் எங்கள் தேசம் நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றுள்ளன. ஒரு வருடம் என்ற அளவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் முழுமை பெறாததால் அகில இந்திய அளவிலும் இந்நிகழ்வுகள் தொடர வேண்டிய தேவை இருப்பதால் 2019ல் இன்னும் சிறப்புடன் வீச்சுடன் எங்கள் தேசம் இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். எங்கள் தேசம் நிகழ்வின் பகுதிகளாக அறிவியல் தின உறுதிமொழி, ஆகஸ்ட் 20- அறிவியல் மனப்பான்மை தினம், “Ask Why” ஆகிய அகில இந்திய அளவிலான நிகழ்வுகள் சிறப்புடன் சென்றுள்ளது.

தேசம் தழுவிய இன்னுமொரு நிகழ்வு இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உடன் பொது நிகழ்வாக இந்த நிகழ்வை கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23  சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 30 மகாத்மா காந்தி நினைவு தினம் ஆகிய தினங்களை நினைவு கூறும் விதமாக “Ask How” இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் மிக முக்கியமான கோசத்தை இந்நிகழ்வில் மிக வலிமையாகவும், பரவலாகவும் கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23,26,30 ஆகிய தினங்களை அந்தந்த தினத்திற்குரிய சிறப்பம்சங்களோடு கொண்டு செல்ல வேண்டும்.

ஜனவரி 23 அன்றைய தினத்தில் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் விசயங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைத்திடலாம். குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கியமான நகரங்களில் ஒரு கருத்தரங்கை திட்டமிட வேண்டும். மாநிலம் முழுவதும் 50 கருத்தரங்குகள் நடத்தலாம். பொதுத்துறை தொழிற்சங்கங்கள் உடன் இணைந்து இந்நிகழ்ச்சியை திட்டமிடலாம். (LIC, BSNL, ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய மாநில அரசு தொழிற்சங்கங்கள்) குடியிருப்போர் சங்கங்கள், நல சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், மகளிர் அமைப்புக்கள்  ஆகியவறையும் இணைத்துக் கொள்ளலாம். கருத்தரங்குடன் வேறு வடிவங்களையும் திட்டமிடலாம். அனைத்து மாவட்டங்களும் ஒரு நிகழ்ச்சியையாவது உறுதி செய்ய வேண்டும்.

ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்வுகளை திட்டமிடலாம். அரசியலமைப்பு பாதுகாப்பு, அரசிலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்தல் போன்ற அம்சங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைக்கலாம். அரசியலமைப்பு பதாகைகளோடு ஊர்வலங்கள், சிறப்பு ஓட்டங்கள், சேர்ந்திசை நிகழ்வுகள், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பெரிய பேனர்கள் உருவாக்குதல், கையெழுத்து இயக்கங்கள், கடிதம் எழுதுதல், இந்திய வரைபடம் உருவாக்குதல் போன்ற நிகழ்வுகளை திட்டமிடலாம். மாவட்டத்தின் தன்மைக்கேற்ப திட்டமிடலாம். இன்னும் சிறப்பான நிகழ்வுகளையும் மாவட்டங்கள் உருவாக்கலாம்.

ஜனவரி 30 ஒற்றுமை, அகிம்சை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிகழ்வுகளை திட்டமிடலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்திடலாம். மகாத்மாவின் அகிம்சை, மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைக் குறித்த உரையாடல்கள் நிகழ்த்தலாம்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கான கருத்துத்தாள்கள் தயாராகிறது. மாவட்டங்கள் நாம் ஏற்கனவே அனுப்பிய எங்கள் தேசம் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்களை இந்நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டும். 10 செட் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்கள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. நாம் வெளியிட்ட எங்கள் தேசம் புத்தகங்கள் மற்றும் AIPSN வெளியிட்ட ஆங்கில புத்தகங்களும் கருத்துத்தாளாக பயன்படுத்தலாம்.

அன்புடன்

அ.அமலராஜன்                                எம்.எஸ்.முகமது பாதுசா

பொதுச்செயலர்                                மாநில ஒருங்கிணைப்பாளர்

—————————————————————————————————-
எங்கள் தேசம்
எல்லோருக்குமான தேசம்
ஜனவரி 2019
பெறுநர்
திருமிகு. மாவட்டச் செயலர், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
அன்புடையீர்,
வணக்கம்.
எங்கள் தேசம் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட நமது மாநில செயற்குழுவில்  திட்டமிட்டுள்ளோம். 2019 ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற இராமேஸ்வரம் செயற்குழுவில்திரு.ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் கருத்துரை ஜனவரி 23,26,30 தேதிகளை மையமாகக் கொண்டத்தாக இருந்தது. மாவட்டங்கள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி 23,26,30 தேதிகளை மிகச்சிறப்பாக திட்டமிடுங்கள். உள்ளூர் கருத்தாளர்களை பயன்படுத்துங்கள்.
சிறிய, பெரிய அளவிலானாலும் கண்டிப்பாக      ஜனவரி 23-30 தேதிகளில் நிகழ்வுகளை நடத்தி அறிக்கைகளை அனுப்புங்கள். வாட்ஸப், முகநூல், மின் அஞ்சல் மற்றும் பல்வேறு வகையிலான வலைதளங்களை பயன்படுத்துங்கள்.  அனைத்து மாவட்டங்களும் திட்டமிட்டுள்ள  நிகழ்ச்சியை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
அ.அமலராஜன் பொதுச்செயலர்
எம்.எஸ்.முகமது பாதுசா
மாநில ஒருங்கிணைப்பாளர்